Home » »


இனி திரைக்குப் பின்னாடி தான் டூட்டி – நடிப்புக்கு ஜெனிலியா முழுக்கு!

திரைக்குப் பின்னாலும் பார்க்க எத்தனையே வேலைகள் இருக்கின்றன, அதனால் இனி நான் அங்கு தான் பிஸியாக இருப்பேன் என்று நடிகை ஜெனிலியா கூறியிருக்கிறார்.
பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து சினிமா உலகத்திலும் பாப்புலரான ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா. 25 வயதான ஜெனிலியா கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி பிரபல ஹாலிவுட் நடிகர் ரித்தேஸ் தேஸ்முக்கை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.
இந்நிலையில் ஜெனிலியா, தனது மேரேஜ் லைஃப் மற்றும் சினிமா லைஃபை பற்றி மனம் திறந்திருக்கிறார்…
ஒரு சிறிய இடைவெளி விட்டிருப்பதால், புதுப்படங்கள் எதிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. மிகச்சிறிய வயதில் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய நான் கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாட்களும் எந்த இடைவெளியும் இன்றி உழைத்திருக்கிறேன்.
திரையுலகில் ஒரு பகுதியாக இருந்த நான் திருமணத்திற்குப் பிறகு இந்த இடைவெளி தேவை என்று நினைத்தேன். திருமணத்திற்குப் பிறகு எனது வாழ்க்கை முறை மாறவில்லை.
டி.வி.யில் நான் தோன்றுவது மட்டும்தான் குறைந்துள்ளது. இது மட்டும் தான் மாற்றம். என்னை பிஸியாக வைத்துக்கொள்ள திரைக்குப் பின்னால் மற்ற விஷயங்கள் உள்ளன.
என் கணவர் ரித்தேஷ் சிசிஎல் கிரிக்கெட் அணியை வாங்கியிருக்கிறார். முதல் முறையாக பாலக் பாலக் என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படி இன்னும் நிறைய விஷயங்களை திரைக்குப் பின்னால் செய்யப்போகிறோம் என்று கூறியிருக்கிறார் ஜெனிலியா.

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Blogger இயக்குவது.

More Latest News

Ads 468x60px

Social Icons

Followers

Latest News

Featured Posts